4 வயது சிறுமி உள்பட 2 பேர் பலி


4 வயது சிறுமி உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் 4 வயது சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் 4 வயது சிறுமி உள்பட 2 பேர் பலியானார்கள்.

சிறுமி பலி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்த மலம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவரது மகள் ஹர்னிதா (4). நேற்று இவர் தனது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த வேன் மோதியது. இந்த விபத்தில் தந்தையும், மகளும் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஹர்னிதா சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர்குட்டப்பட்டு முத்துகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமேரி (70). இவர் நேற்று மதியம் கடைக்கு சென்று விட்டு திருச்சி -திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த மொபட் மோதியதில் ஜெயமேரி பலத்த காயம் அடைந்தார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிசிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story