வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை


வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
x

வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருமணம் ஆகவில்லை

திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் 7-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பூமிநாதன் (வயது 31). இவர் துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த பூமிநாதன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷம் குடித்தவர் சாவு

திருச்சி ஏர்போர்ட் ஜே.கே.நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (39). இவர் குடிபழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அவரது மனைவி வெள்ளையம்மாள்(38) பார்த்திபனை பிரிந்து திண்டுக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனம் உடைந்த பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத போது, விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வெள்ளையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story