கொலை வழக்கில் கைதானவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை வழக்கில் கைதானவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கொலை வழக்கில் கைதானவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி

திருச்சி உறையூர் சாலைரோட்டில் டிபன்கடை நடத்தி வந்தவரை கடந்த மாதம் 9-ந் தேதி கொலை செய்தது குறித்த வழக்கில், சாமிநாதன் (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், சாமிநாதன் மீது காரில் ஒருவரை கடத்தி பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்கு உள்பட 6 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதேபோல் கடந்த மாதம் 20-ந் தேதி காந்திமார்க்கெட் மணிக்கூண்டு அருகே ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன் பறித்த புகாரில், அரவிந்த் என்ற ஜாம்பர் (20) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் இவர் மீது கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்த வழக்கு, கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த வழக்கு உள்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாமிநாதன், அரவிந்த் என்ற ஜாம்பர் ஆகியோரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


Next Story