மது விற்ற 2 பேர் கைது



மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை அருகே உள்ள தண்ணீர் பள்ளி மற்றும் கோட்டமேடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் தண்ணீர்பள்ளி கல்லுபாலம் அருகே மதுவிற்ற தண்ணீர்பள்ளி புத்துக்கோயில் தெருவை சேர்ந்த பொன்னர் (வயது 52) என்பவரை கைது செய்தனர். இதேபோல கோட்டமேடு பகுதியில் தனது வீட்டின் பின்புறம் வைத்து மதுவிற்ற சிவானந்தம் (54) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து மொத்தம் 11 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire