அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x

பேரளத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்

நன்னிலம்:

பேரளத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சன்னரக நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் கூலி தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து அரவைக்காக நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றது.


Related Tags :
Next Story