குமரி மாவட்டத்தில் மழை:சுருளக்கோடு பகுதியில் 20 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் மழை:சுருளக்கோடு பகுதியில் 20 மி.மீ. பதிவு
x

குமரி மாவட்டத்தில் மழை பெய்தது. சுருளக்கோடு பகுதியில் 20 மி.மீ. பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் மழை பெய்தது. சுருளக்கோடு பகுதியில் 20 மி.மீ. பதிவாகி உள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல இடங்களில் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு விட்டு, விட்டு சாரல் மழையாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை-5.8, பெருஞ்சாணி அணை-17.4, சிற்றார்-1 அணை-2.4, சிற்றார்-2 அணை -4.2, புத்தன் அணை- 15.2, மாம்பழத்துறையாறு அணை- 19, முக்கடல் அணை-17, பூதப்பாண்டி- 12.4, களியல்- 7.4, கன்னிமார்- 18.4, குழித்துறை- 4, சுருளக்கோடு- 20, தக்கலை- 6, பாலமோர்- 15.4, திற்பரப்பு- 7.8, ஆரல்வாய்மொழி- 2, கோழிப்போர்விளை- 13.2, அடையாமடை- 9, முள்ளங்கினாவிளை- 6.4, ஆனைக்கிடங்கு- 17.2 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.

இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 548 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் அணையில் இருந்து வினாடிக்கு 584 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 38.33 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 191 கன அடி நீர்வரத்தும், அணையில் இருந்து 175 கன அடி தண்ணீர் திறந்தும் விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 62.35 அடியாக உள்ளது.

சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 9 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 18 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு ஒரு கன அடி தண்ணீரும் வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணைக்கு வினாடிக்கு 5.6 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.


Next Story