மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 July 2017 10:30 PM GMT (Updated: 15 July 2017 7:13 PM GMT)

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து 2013-ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.ஆனால் சென்னை, திருவள்ளூர், கடலூர், மதுரை, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மனிதக் கழிவுகளை அகற்றிய போது 30 பேர் பலியாகி உள்ளனர். 

Next Story