தினமும் தம்மை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


தினமும் தம்மை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம் முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 July 2017 9:06 AM GMT (Updated: 23 July 2017 9:05 AM GMT)

பொதுமக்கள் தினமும் 2 முறை தம்மை நேரில் சந்தித்து மனு கொடுக்கலாம் என முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

எடப்பாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
 
தினமும் 2 முறை தம்மை நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம். மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்
முதல்-அமைச்சராக இருந்தாலும் தமது அன்றாட நடவடிக்கையில் மாற்றம் இல்லை. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக பிரதமரை இரு முறை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அம்மா உணவக திட்டம் சேவை மனப்பான்மையுடன் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது; அதில் லாப நஷ்டம் பற்றி கவலையில்லை.  சட்டம் ஒழுங்கை சீர் குலைப்போர்கள் மீது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Next Story