சுதந்திர தினத்தை முன்னிட்டு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, ஐ.ஜி.ஈஸ்வரமூர்த்திக்கு முதல்–அமைச்சர் விருது


சுதந்திர தினத்தை முன்னிட்டு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, ஐ.ஜி.ஈஸ்வரமூர்த்திக்கு முதல்–அமைச்சர் விருது
x
தினத்தந்தி 14 Aug 2017 10:45 PM GMT (Updated: 14 Aug 2017 9:38 PM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பான பொதுச்சேவை பணிக்காக கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்–அமைச்சர் விருது வழங்கப்படுகிறது.

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புலன் விசாரணை பணியில் மிக சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்–அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புபணி பதக்கங்களை வழங்கிட முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

சிறப்பு பணி பதக்கங்கள் பெறுபவர்களின் பெயர் விவரம் வருமாறு:–

கே.வீரமணி, (காவல் கூடுதல் கண்காணிப்பாளர், தலைமையிடம், காஞ்சீபுரம் மாவட்டம்.) ப.அசோக் நடராஜன், (காவல் துணை கண்காணிப்பாளர், பொருளாதாரகுற்ற பிரிவு, தலைமையிடம், சென்னை.) வெ.சந்திரசேகரன், (காவல் ஆய்வாளர், மத்திய குற்றப்பிரிவு, மதுரை மாநகரம்.) ஜா.நாகராஜன், காவல் ஆய்வாளர், அம்மாபேட்டை காவல் நிலையம், சேலம் மாநகரம்.)

சி.உமாதேவி, (காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, குற்ற புலனாய்வுத்துறை, மெட்ரோ, சென்னை.) ஆ.சிவஆனந்த், (காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு, குற்ற புலனாய்வுத்துறை, தலைமையிடம், சென்னை.) ஜே.அன்புபிரகாஷ், (காவல் ஆய்வாளர், வள்ளியூர் காவல் நிலையம், திருநெல்வேலி மாவட்டம்.)

பார்த்திபன், (காவல் ஆய்வாளர், நத்தம் காவல்நிலையம், திண்டுக்கல் மாவட்டம்.) ஜே.மலர்கொடி, (காவல் ஆய்வாளர், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், பெரம்பலூர் மாவட்டம்.) மு.சுந்தரமூர்த்தி, (காவல் உதவி ஆய்வாளர், இருப்பு பாதை காவல், திருச்சி மாவட்டம்.)

இதே போன்று, பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களுடைய பணியை பாராட்டி, சிறந்த பொது சேவைக்கான தமிழக முதல்–அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–

கே.ஜெயந்த் முரளி, (கூடுதல் டி.ஜி.பி, குற்றப்பிரிவு, குற்ற புலனாய்வுதுறை, சென்னை.) சி.ஈஸ்வரமூர்த்தி, (காவல்துறை ஐ.ஜி., நுண்ணறிவுப் பிரிவு உள்நாட்டுப் பாதுகாப்பு, சென்னை.) ஆ.மயில்வாகனன், (காவல் துணை ஆணையர், தலைமையிடம், மதுரை மாநகரம்.)

மு.சந்திரசேகரன், (காவல் துணை கண்காணிப்பாளர், ஓமலூர் உட்கோட்டம், சேலம் மாவட்டம்.) எஸ்.விஜயன், (காவல் ஆய்வாளர், பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம்.) ஜே.சுதா, முதல் நிலை பெண் காவலர், விழுப்புரம் இருப்பு பாதை காவல் நிலையம், திருச்சி)

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் பெறுவார்கள்.

மேற்கண்ட விருதுகள், முதல்–அமைச்சர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்காணும் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story