அ.தி.மு.க அணிகள் இணைப்பு விவகாரத்தில் அடுத்து என்ன? ஓ.பன்னீர்செல்வத்துடன் 2 அமைச்சர்கள் சந்திப்பு


அ.தி.மு.க அணிகள் இணைப்பு விவகாரத்தில் அடுத்து என்ன? ஓ.பன்னீர்செல்வத்துடன் 2 அமைச்சர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 18 Aug 2017 9:06 AM GMT (Updated: 18 Aug 2017 9:06 AM GMT)

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்தித்து பேசினர்.

சென்னை

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம் ஓ.பி.எஸ். அணியினரின் இரு முக்கிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து அ.தி.மு.க. வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மீண்டும் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்றிரவு சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். அப்போது அதிகார பகிர்வுகள் மற்றும் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்குவது பற்றி விவாதிக் கப்பட உள்ளது.

இதற்கிடையே எடப்பாடி அணியினருடன் பேசுவதற்கு முன்பு தங்களை தயார்படுத்தி கொள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங் கேற்கும்படி முக்கிய நிர் வாகிகளுக்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் அழைப்பு கொடுக்கப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அவசர அழைப்பை ஏற்று நிர்வாகிகள் இன்று சென்னை வந்தனர். ஓ.பி.எஸ். தலைமையில் மாலையில் நடக்கும் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, செம்மலை, பி.எச்.பாண்டியன், மைத்ரே யன், ம.பா.பாண்டிய ராஜன், நத்தம் விசுவநாதன், மனோஜ் பாண்டியன், ராஜகண் ணப்பன், கே.சி.பழனிசாமி உள்ளிட்ட வர்கள் இடம்பெறு கிறார்கள். கூட்டத்தில் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான சாதகமான சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அணி யின் முக்கிய நிபந்தனைகள் ஏற்கப்பட்டு இருப்பதால் இணைப்பு குறித்து இன்றே முக்கிய முடிவு எடுக்கப் படுகிறது. அதன் தொடர்ச்சியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை கள் குறித்தும் முடிவு 
எடுக்கப்படுகிறது.

கட்சியிலும், ஆட்சியிலும் என்னென்ன பொறுப்புகளை கேட்டு பெறுவது, ஏற் கனவே வகித்து வந்த பதவி களை மீண்டும் கேட்டு பெறவும், கட்சியில் முக்கிய பொறுப்புகளை தங்களது ஆதரவாளர்களுக்கு கேட்கவும் இன்று நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.

முதல்வர், துணை முதல்வர், பொதுச்செய லாளர், அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளை ஒதுக்குவதற்கும் ஆட்சியை வழி நடத்துவதற்கும் வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைக்க வும். அதில் முக்கிய நிர்வாகிகளை இடம்பெறச் செய்வது குறித்தும் கருத்து கேட்கப்படுகிறது.

நிர்வாகிகளிடம் கருத்துக் களை கேட்ட பிறகு ஓ.பன்னீர் செல்வம் இரு அணிகள் இணைப்பு குறித்து முக்கிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிந்தவர்கள் மீண்டும் சேருவார்கள் என்ற 
நம்பிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்தித்து பேசினர்.போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயாரை ஓ.பி.எஸ் பார்க்க சென்ற சென்ற போது சந்திப்பு நடைபெற்றுள்ளது.

 இரு அணிகள் இணைப்பில் திரைமறைவில் சில விஷயங்கள் பேசபட்டு வருகின்றன அதன் அடிப்படையில்  கீழ்கண்டவாறு முடிவுகள் எடுக்கபடாலம் என தெரிகிறது. 

* கட்சி கட்டமைப்பிலும், ஆட்சி கட்டமைப்பிலும் மாற்றம் செய்வது குறித்து இரு அணிகளிலும் பேச்சுவார்த்தை என தகவல்.

* கட்சியை வழி நடத்த 7 அல்லது 9 பேர் கொண்ட வழிகாட்டுக்குழு அமைக்கப்படும் என தகவல். வழிகாட்டு குழு தலைவராக ஓ.பன்னீர் செல்வம் இருப்பார்.

* பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி, குறைந்தபட்சம் மேலும் இருவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்பு

* துணை முதல்அமைச்சர் பதவியை  ஓ.பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுக்க சம்மதிக் கப்பட்டது. அதுபோல நிதித்துறையையும் ஓ.பி.எஸ். அணியினருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் பொதுப்பணித் துறையை ஓ.பி.எஸ். அணிக்கு கொடுக்க எடப்பாடி அணியினர் தயக்கம் தெரிவித்துள்ளனர். அது போல உள்துறை இலாகாவை ஓ.பி.எஸ்.சுக்கு ஒதுக்கும் கோரிக்கைக்கும் தயக்கம் தெரிவித்துள்ளனர்.


Next Story