பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்


பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்
x
தினத்தந்தி 20 April 2018 8:00 AM GMT (Updated: 20 April 2018 8:05 AM GMT)

பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சை கருத்துக்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். #SVeShekher

சென்னை, 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அந்த செய்தியாளரிடம்  தன் செய்கைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தொடர்ச்சியான இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழ ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் தனது  பேஸ்புக் பக்கத்தில் மிக மிக அநாகரிகமான  வார்த்தைகளால்  ஒரு பதிவை பகிர்ந்து இருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் உடனடியாக நீக்கி விட்டார். ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி வெளியிட்ட  கருத்துக்காக எஸ்.வி சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். மன வருத்தம் ஏற்பட்டுள்ள பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

Next Story