16 முன்பதிவில்லா பெட்டிகளுடன் தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்


16 முன்பதிவில்லா பெட்டிகளுடன் தாம்பரம்-நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ்
x
தினத்தந்தி 24 April 2018 9:03 PM GMT (Updated: 24 April 2018 9:03 PM GMT)

தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வருகிற 27-ந் தேதி முதல் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை, 

தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16191), பிற்பகல் 3.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (16192), காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இந்த எக்ஸ்பிரஸ் ரெயில், 16 முன்பதிவில்லா பெட்டிகளை உள்ளடக்கியது ஆகும்.

இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும்.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Next Story