திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்


திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்
x
தினத்தந்தி 19 May 2018 6:43 AM GMT (Updated: 19 May 2018 6:43 AM GMT)

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

திருச்சி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான்  ம.தி.மு.க பொதுச்செயலாளர்  வைகோ இருவரும்  வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை திருச்சி வந்தனர்.  இருவரும் ஒரே விமானத்தில் வந்தனர்.

இருவரையும் வரவேற்க அவர்களது கட்சி தொண்டர்கள்  விமான நிலையத்தில் குவிந்தனர்.  இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பும்போது  ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வாழ்த்து கோஷம் எழுப்பினர். பின்னர்  இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. ஒருவருக்கொருவர் கொடிக்கம்புகளால் தாக்கி கொண்டனர்.

இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சித் தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த திடீர் தாக்குதலால் அந்தப் பகுதி பரபரப்பானது.

Next Story