ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2019 8:49 AM GMT (Updated: 2 Jan 2019 8:49 AM GMT)

ஜெயலலிதாவின் சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜன.,2) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் மற்றும் கடன் விவரங்களை தாக்கல் செய்ய வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 
வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் ரூ.100 கோடி மதிப்பிருக்கும் என தீபக் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story