திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்


திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 March 2019 2:14 AM GMT (Updated: 20 March 2019 8:36 AM GMT)

திருவாரூர் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொடங்கினார்.

திருவாரூர், 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. தற்போதைய சூழ்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் என்று தேர்தல் களத்தில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

இருப்பினும், அ.தி.மு.க.- தி.மு.க. இரு அணிகளுக்கிடையே தான் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் புதிய தலைமையுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், அந்த கட்சிகளின் வெற்றி, தோல்வி குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அ.தி.மு.க. வும், தி.மு.க.வும் கடந்த 17 ஆம் தேதி, ஒரே நாளில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.  இரு கட்சிகளும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. 

இந்த நிலையில்,  இன்று காலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து மு.க ஸ்டாலின் பிரசாரத்தை துவங்கினார். திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


Next Story