நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத் தேர்தல்: இதுவரை 56 பேர் வேட்புமனு தாக்கல்


நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத் தேர்தல்: இதுவரை 56 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 21 March 2019 6:49 PM GMT (Updated: 21 March 2019 6:49 PM GMT)

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் 19-ந் தேதி தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் 19-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 20 பேரும், சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக 2 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். 2-ம் நாளில் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக 10 பேரும், சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 2-ம் நாள் நிலவரப்படி இரண்டு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆக இருந்தது.

இந்த நிலையில், 3-ம் நாளான நேற்று வரை நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் பெண். சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஆக இதுவரை மொத்தம் 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Next Story