அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டும் என்று வந்துள்ளேன் -கலைச்செல்வன் எம்.எல்.ஏ.


அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டும் என்று வந்துள்ளேன் -கலைச்செல்வன் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 3 July 2019 11:44 AM GMT (Updated: 3 July 2019 11:44 AM GMT)

அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டும் என்று வந்துள்ளேன் என கலைச்செல்வன் எம்.எல்.ஏ கூறினார்.

சென்னை

டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.

டிடிவி தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்த கலைச் செல்வன் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ஒதுங்கியிருந்தார். அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கலைச் செல்வனுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வரை அவர் சந்தித்து உள்ளார். முதலமைச்சர் உடனான சந்திப்பிக்கு பிறகு சபாநாயகர் தனபாலை சந்தித்தார் எம்.எல்.ஏ கலைச்செல்வன்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உண்மையான அதிமுக யார் என்பதை மக்கள் அடையாளம் காட்டிவிட்டார்கள். அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டும் என்று வந்துள்ளேன். மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். நான் எப்போதும் அதிமுகவுக்கு ஆதரவாக தான் இருப்பேன்.

ஜெயலலிதா அமைத்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற தினகரனின் எண்ணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

Next Story