சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை


சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை
x

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்த இந்த நடைமுறையால் இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது ஆறுதலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் நாடாளுமன்ற மக்களவையில் 2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில் எண்ணெய் பொருட்களுக்கான கலால் வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியானது.  இதனால் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்வடைந்தது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.75.76க்கும், டீசல் விலை ரூ.2.52 உயர்ந்து ரூ.70.48க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.  பட்ஜெட்டில் கலால் வரி உயர்த்தப்பட்டு புதிய சாலை மேம்பாட்டு வரி விதிக்கப்பட்ட நிலையில் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.  இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.

Next Story