தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை


தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை
x
தினத்தந்தி 9 Aug 2019 2:53 AM GMT (Updated: 9 Aug 2019 3:00 AM GMT)

வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் 1177 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 4,402 வாக்குகளும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 3,994 வாக்குகளும் பெற்றுள்ளார்.


Next Story