வேலூரில் வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள் -போலீசார் விசாரணை + "||" + In Vellore The mysterious object that fell from the sky Police are investigating
வேலூரில் வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள் -போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் கவசம்பட்டு பகுதியில் இரவில் வானத்திலிருந்து விழுந்ததாக கூறப்படும் மர்ம பொருளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவசம்பட்டு பகுதியில் வானத்தில் இருந்து இரவில் மர்மப்பொருள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் வானத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படும் மர்ம பொருளில் மின் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற கே.வி.குப்பம் போலீசார், மர்ம பொருளை கைப்பற்றி தடயவியல் வல்லுநர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்ததில் அது வெடிபொருள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் வானிலை ஆய்வு சம்பந்தப்பட்ட பொருள் என்று கூறிய காவல்துறையினர், இதனை முழு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இப்பொருள் எங்கிருந்து அனுப்பப்பட்டது வானில் இருந்து எப்படி விழுந்தது என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மணி நேரம் கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வேலூரில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்