பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரம்


பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி  தீவிரம்
x
தினத்தந்தி 5 Oct 2019 5:50 AM GMT (Updated: 5 Oct 2019 5:50 AM GMT)

பிரதமர் வருகையை ஒட்டி சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்வு வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடக்கிறது. 

 இவர்கள் வருகையொட்டி , சென்னை நகரில் முக்கிய சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நள்ளிரவில் நடைபெற்றது. கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ், தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் புதுப்பித்தல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன. 

Next Story