வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது


வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது
x
தினத்தந்தி 6 Nov 2019 9:28 AM GMT (Updated: 6 Nov 2019 9:28 AM GMT)

வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்,

பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவரின் உருவப்படம் பதிவிடப்பட்டிருந்தது. காவி உடையுடன் நெற்றியில் திருநீறு அணிந்து கழுத்தில் ருத்ராட்சத்துடன் இருப்பது போன்று பதிவிடப்பட்டிருந்த அந்த புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

திருவள்ளுவர் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்றும் அவருக்கு மதஅடையாளம் கொடுக்க முயற்சி செய்வது கடும் கண்டனத்திற்குரியது  என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் காவி துண்டு அணிவித்தார்.

தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து  தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் உடையாளூரில் உள்ள ராஜராஜசோழன் சமாதி அருகே அர்ஜுன் சம்பத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

Next Story