ரஜினி-கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் வேறு முடிவு எடுப்பார்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடி பேட்டி


ரஜினி-கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் வேறு முடிவு எடுப்பார்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிரடி பேட்டி
x
தினத்தந்தி 20 Nov 2019 11:24 PM GMT (Updated: 20 Nov 2019 11:24 PM GMT)

ரஜினி-கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் வேறு முடிவு எடுப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து நேற்று பாசனத்துக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரஜினி-கமல்

ரஜினி, கமல் ஒன்று சேர்ந்தாலும் அவரது ரசிகர்கள் சேரமாட்டார்கள். ரசிகர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் உள்ளன. ரஜினி-கமல் ஒரு முடிவு எடுத்தால், மக்கள் வேறு ஒரு முடிவு எடுப்பார்கள். தேர்தலில் அ.தி.மு.க.தான் வெல்லும். இரட்டை இலைதான் ஜெயிக்கும்,

உலகமே அதிசயமாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இவ்வளவு பெரிய நடிகராக வருவார் என்று ரஜினி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். அவர் நடிகராக வந்ததும் ஒரு அதிசயம்தான்.

தனித்து நிற்க வேண்டும்

அனைத்து கட்சியும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க வேண்டும். அப்போது யாருக்கு பலம் இருக்கிறது என்று பார்த்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலில் யார் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று முடிவெடுக்கலாம். இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Next Story