தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் கலக்கம்


தொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் கலக்கம்
x
தினத்தந்தி 7 Jan 2020 1:14 AM GMT (Updated: 7 Jan 2020 1:14 AM GMT)

பெட்ரோல் , டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக விலையேற்றத்தை சந்தித்துள்ளது.

சென்னை,

ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை (வயது 62) அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்ட தினத்தில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.

இதனால்,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அது இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை ஏற் படுத்தி வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளன.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து , ஒரு லிட்டர் ரூ.78.69 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.69 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story