டீசல் விலை 16 காசுகள் உயர்வு, பெட்ரோல் விலையும் உயர்ந்தது


டீசல் விலை 16 காசுகள் உயர்வு, பெட்ரோல் விலையும் உயர்ந்தது
x
தினத்தந்தி 9 Jan 2020 1:51 AM GMT (Updated: 9 Jan 2020 1:51 AM GMT)

டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.72.85 ஆக விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன. 

ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலா, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஒருவாரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. 

6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வந்த நிலையில், நேற்று மட்டும் விலையில் மாற்றம் இன்றி விற்பனையானது. இந்த நிலையில், இன்று மீண்டும் விலையேற்றத்தை சந்தித்துள்ளது.  எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.77 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.72.85ஆகவும் உள்ளது. 

டீசல் விலை தொடர்ந்து  உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 


Next Story