ஊரடங்கு உத்தரவு மீறல்: தமிழகத்தில் கைது எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது


ஊரடங்கு உத்தரவு மீறல்: தமிழகத்தில் கைது எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 6 April 2020 9:00 PM GMT (Updated: 6 April 2020 8:22 PM GMT)

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும், 82 ஆயிரத்து 752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 90 ஆயிரத்து 918 பேர் கைது செய்யப்பட்டனர். 69 ஆயிரத்து 589 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.25 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி கைது எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியதாக போலீசார் தெரிவித்தனர். சென்னையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று பகல் வரை 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உரிய போலீஸ் அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியதாக, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 14 தி.மு.க.வினர் மீதும், கே.கே.நகர் பகுதியில் 3 தி.மு.க.வினர் மீதும் வழக்கு போடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story