தமிழகத்திற்கு நல்ல செய்தி: 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்தனர்


தமிழகத்திற்கு நல்ல செய்தி: 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா  சிகிச்சையில் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 7 April 2020 4:53 AM GMT (Updated: 7 April 2020 4:53 AM GMT)

தமிழகத்திற்கு நல்ல செய்தி: 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

கோவை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 621 ஆக உயர்ந்து உள்ளது.கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

இந்நிலையில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். 

மேலும் கொரோனா சிகிச்சைக்கு முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 25 வயது மாணவியும் குணமடைந்து வீடு திரும்பினார் என்று கூறியுள்ளார். மேலும், குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட 5 பேரும் 14 நாட்கள் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார். இதன்முலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

Next Story