தமிழகத்தில் ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 20 May 2020 1:35 PM GMT (Updated: 20 May 2020 1:35 PM GMT)

தமிழகத்தில் ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் 660 பேர் தமிழகத்தில் இருந்தும் மற்றும் 83 பேர் மராட்டியத்தில் இருந்தும் வந்தவர்கள் அவர்.  இவர்களில் 442 பேர் ஆண்கள் மற்றும் 301 பேர் பெண்கள்.

தமிழகத்தில் 7,219 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இன்று ஒரே நாளில் அதிக அளவாக 987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் மொத்த எண்ணிக்கை 4,895ல் இருந்து 5,882 ஆக உயர்ந்து உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,448ல் இருந்து 13,191 ஆக உயர்ந்து உள்ளது.  இவர்களில் 8,496 பேர் ஆண்கள், 4,692 பேர் பெண்கள், 3 பேர் திருநங்கைகள் ஆவர்.  3 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 87 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

Next Story