தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி - தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 22 May 2020 6:22 AM GMT (Updated: 22 May 2020 10:28 AM GMT)

தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் நாளை முதல்  தமிழகத்தில் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆட்டோக்கள் இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்  அறிவிக்கப்பட்டுள்ளன.

*காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் இயங்க அனுமதி
ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டுமே ஆட்டோவில் அனுமதி
*சென்னையை தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி
* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி கிடையாது

போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Next Story