ஆர்.எஸ் பாரதியை நீதிமன்ற காவலில் வைப்பது தொடர்பான விசாரணை முடிவு- உத்தரவு தள்ளிவைப்பு


ஆர்.எஸ் பாரதியை நீதிமன்ற காவலில் வைப்பது தொடர்பான விசாரணை முடிவு- உத்தரவு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 23 May 2020 4:49 AM GMT (Updated: 23 May 2020 5:31 AM GMT)

ஆர்.எஸ் பாரதியை நீதிமன்ற காவலில் வைப்பது தொடர்பான விசாரணை முடிந்தது உத்தரவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்து அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.

 நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதையடுத்து ஆர்.எஸ் பாரதி  நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.  நீதிமன்ற காவலில் வைப்பது தொடர்பான விசாரணை முடிந்து உத்தரவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 


Next Story