கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு


கொரோனா பாதிப்பு:  பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2020 1:52 AM GMT (Updated: 4 Jun 2020 9:33 AM GMT)

கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தி உள்ளன.

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் பிரதமர் மோடியின் செயல்பாடு மற்றும் மாநில முதலமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. அதன்படி, தேசிய அளவில் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 65.69 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

அதில், 58.36 சதவீத அதிக திருப்தியடைந்ததாகவும், 24.01 சதவீதம் திருப்தியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். 16.71 சவீதத்தினர் மோடியின் செயல்பாட்டிற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் பிரதமர் மோடியின் செயல்பாட்டிற்கு 95.6 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 84.87 சதவீதம் பேர் "மிகவும் திருப்தி" அடைந்தனர், அவர்களில் 2.2 சதவீதம் பேர் மோடியை ஏற்கவில்லை.

ஒடிசாவைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கார் மற்றும் ஆந்திரா ஆகியவை உள்ளன, அங்கு அவரது புகழ் முறையே 93.95 சதவீதம், 92.73 மற்றும் 83.6 என உள்ளது. சுவாரஸ்யமாக, ஒடிசாவைப் போலவே, இந்த மூன்று மாநிலங்களில் இரண்டு பா.ஜனதா ஆளாத மாநிலங்கள்.

தொற்று பாதிப்பு அதிகமுள்ள மராட்டியத்தில் பிரதமர் மோடிக்கு 71 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.

இதேபோல், இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க இருக்கும் பீகாரில் 58.48 சதவீதத்தினரும், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் மேற்குவங்காளத்தில் 60 சதவீதத்தினர் மோடியின் செயல்பாட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்,

தென் மாநிலங்களான தமிழகத்தில் 32.15 சதவீதத்தினரும், கேரளாவில் 32.89 சதவீதத்தினரும் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.தமிழ்நாடு, கேரளா, கோவா மாநிலங்களில் பிரதமர் மோடியை விட ராகுல்காந்திக்கு அதிக செல்வாக்கு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் தேசிய அளவில் பிரதமர் மோடியுடன் ஒப்பிடுகையில் ராகுல்காந்திக்கு 23 சதவீதத்தினரே ஆதரவு தெரிவித்துள்ளனர். 

உண்மையில், ராகுல்காந்தியின் செல்வாக்கு இரட்டைவாக்கு  ஆறு மாநிலங்கள் அல்லது பிராந்தியங்கள் மட்டுமே. இரட்டை இலக்கங்களில் இருந்தன மீதமுள்ள அனைத்து மாநிலங்களும் ஒற்றை இலக்கத்தில் அல்லது மோசமாக, எதிர்மறையாக இருந்தன.

காங்கிரஸ் ஆளும் அல்லது ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கும் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் பதிலளித்தவர்கள் அவரைப் பற்றி மிக உயர்ந்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, காங்கிரஸ் ஆட்சியில் உள்ள சத்தீஸ்காரில் ராகுல்காந்திக்கு 5.41 சதவீத ஆதரவு கிடைத்தது. 

மாநில முதலமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 97 சதவீத ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார்.

சத்தீஸ்கார் முதலமைச்சர் பூபேஷ் பாகல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், கர்நாடக முதலமைச்சர் எடியூர்ப்பாவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகளவில் உள்ளது.

மக்கள் செல்வாக்கு குறைந்த முதல்வர்கள் பட்டியலில் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் அவர்களைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இடம்பிடித்துள்ளனர்,

அதேபோல், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் குறைந்த மக்கள் செல்வாக்கு உடைய முதலமைச்சர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை சமாளிக்க முடியாததால் உலக நாட்டு தலைவர்களின் செல்வாக்கும் அந்நாட்டு மக்கள் மத்தியில் குறைந்திருப்பது இந்த ஆய்வு மூலம் தெரிய வந்திருக்கிறது.


Next Story