10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்


10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 9 Jun 2020 10:59 AM GMT (Updated: 9 Jun 2020 11:03 AM GMT)

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தும்மல், இருமல், காய்ச்சல், உடல்வலி ஆகியவை கொரோனாவின் அறிகுறிகள். களத்தில் 11 ஆயிரம் அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை. பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டே பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ஊரடங்கை மீறியதாக வாகன பறிமுதல், அபராதம் என கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை வேண்டும். நம்மால் மற்றவர்களும் பாதிக்க கூடாது என்ற எண்ணம் வேண்டும். மக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் முக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வரவேண்டும். சட்டத்தை வைத்து மிரட்ட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story