சாத்தான்குளம் தந்தை- மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சாத்தான்குளம் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:-
தந்தையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை கடும் சொற்களை பயன்படுத்தி விமர்சனம் செய்ததற்காக வருந்துகிறேன். இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சாத்தான்குளத்தில், புத்தன் தருவைகுளத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறப்பதில் பாரபட்சமாக நடந்து கொண்ட அதிகாரிகளை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர்.