சாத்தான்குளம் சம்பவம்; தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு காவலர் ரேவதி ஆஜர்


சாத்தான்குளம் சம்பவம்;  தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு காவலர் ரேவதி ஆஜர்
x
தினத்தந்தி 3 July 2020 6:36 AM GMT (Updated: 3 July 2020 7:51 AM GMT)

நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜராகி காவல்நிலையத்தில் நடந்தது குறித்து காவலர் ரேவதி விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தலைமைறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,  சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு காவலர் ரேவதி ஆஜர் ஆனார். நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜராகி காவல்நிலையத்தில் நடந்தது குறித்து காவலர் ரேவதி விளக்கம் அளித்தார்.

Next Story