சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியல் - சென்னை மாநகராட்சி வெளியீடு


சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியல் - சென்னை மாநகராட்சி வெளியீடு
x
தினத்தந்தி 3 July 2020 11:17 AM GMT (Updated: 3 July 2020 11:17 AM GMT)

சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 62,598 ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக  கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி  வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் பின்வருமாறு:-

* அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் ஆயிரத்து 176 பேரும், மணலியில் 513 பேரும் மாதவரத்தில் 910 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

* தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 856 பேரும்,  ராயபுரத்தில் 2 ஆயிரத்து 239 பேரும், திருவிக நகரில் ஆயிரத்து 832 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* அம்பத்தூர் மண்டலத்தில் ஆயிரத்து 259 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 317 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 965 பேரும் , கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 680 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* வளசரவாக்கத்தில் ஆயிரத்து 158 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 872 பேரும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 682 பேரும்  பெருங்குடியில்   821 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 493 பேரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

Next Story