வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு


வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 July 2020 4:28 AM GMT (Updated: 5 July 2020 4:28 AM GMT)

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன.  இவற்றில், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

வேலூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,842 ஆக இருந்தது.

இந்த நிலையில், வேலூர்  மாவட்டத்தில் இன்று  ஒரே நாளில் மேலும் 118 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 1,960 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  ஒரே நாளில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,167 ஆக அதிகரித்துள்ளது.

Next Story