கொரோனா பாதித்த சென்னை ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு


கொரோனா பாதித்த சென்னை ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 July 2020 3:13 AM GMT (Updated: 6 July 2020 3:13 AM GMT)

சென்னையில் கொரோனா பாதித்த ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் இந்த நோய் தொற்றால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33 வயதான நாகராஜன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Next Story