வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 7 July 2020 2:23 AM GMT (Updated: 7 July 2020 2:23 AM GMT)

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி வருகின்றன.  

வேலூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  2 ஆயிரத்தை தாண்டி இருந்தது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,225ஆக உயர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து மாவட்டத்தில்  854 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1,371 பேர் நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story