செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 8 July 2020 8:25 AM GMT (Updated: 8 July 2020 8:25 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்குள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,942 ஆக இருந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறீஉதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,096 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தற்போது வரை 2,851 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,954 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

Next Story