சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை
x
தினத்தந்தி 9 July 2020 9:26 PM GMT (Updated: 9 July 2020 11:06 PM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில சிலடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஓரிடு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததது. நகரின் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


Next Story