விருதுநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக உயர்வு


விருதுநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 July 2020 9:07 AM GMT (Updated: 14 July 2020 9:07 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,492 ஆக உயர்ந்து உள்ளது.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  தொடர்ந்து சமீப நாட்களாக மதுரையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது.  இதனால் இன்று நள்ளிரவு 12 மணி வரை மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதேபோன்று மதுரையை அடுத்த விருதுநகர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  ஒரே நாளில் 10 கர்ப்பிணிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.  இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 351 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.  983 பேர் குணமடைந்து உள்ளனர்.  ஆயிரத்து 492 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story