தமிழகத்தில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 14 July 2020 1:53 PM GMT (Updated: 14 July 2020 1:53 PM GMT)

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் வேகம் முன்பைவிட சற்று தணிந்துள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இன்று சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,47,324ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 11-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றால் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2.099 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story