தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமி


தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா  குறைய அரசு நடவடிக்கை;  முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 15 July 2020 10:55 AM GMT (Updated: 15 July 2020 10:55 AM GMT)

தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:- தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும். சென்னை மாநகராட்சி பகுதியில் 600-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. தமிழகத்தில் தான் அதிகளவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு ரூ.672 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது” என்றார்.


Next Story