தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் மேலும்  4,538 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில்  79 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 July 2020 1:01 PM GMT (Updated: 17 July 2020 1:02 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் பிற மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4, 538  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,60,907 -ஆக உள்ளது. தமிழகத்தில்  இன்று ஒரே நாளில்  கொரோனாவில் இருந்து குணம் அடைந்து 3,391  பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருநாளில்  1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு  79  உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2315 ஆக உள்ளது. 

Next Story