அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா துவங்கியது


அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா துவங்கியது
x
தினத்தந்தி 15 Sep 2020 12:47 PM GMT (Updated: 15 Sep 2020 12:47 PM GMT)

அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.


சென்னை,

திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 17 - பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள், செப்டம்பர் 15 - அண்ணா பிறந்த நாள், இந்த 3 விழாக்களையும் இணைத்து கருணாநிதி முப்பெரும் விழாவாக்கினார்.

அந்த வழியில் இந்த ஆண்டும் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஊரடங்கு கால விதிமுறைகளை மீறாமல், பாதுகாப்பு, தனிமனித இடைவெளியுடன் செப்.15-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறும்” என அவர் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து தற்போது திமுகவின் புதிய பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story