தமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 17 Sep 2020 12:55 PM GMT (Updated: 17 Sep 2020 1:30 PM GMT)

தமிழகத்தில் இன்று 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,25,420 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 59 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 992 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,52,567 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 956 பேர் குணடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 239 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 187 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,524 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் 46,610 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story