தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 21 Sep 2020 1:50 PM GMT (Updated: 21 Sep 2020 1:50 PM GMT)

தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,47,337 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 60 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,871 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 982 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,625 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 219 பேருக்கும், திருவள்ளூரில் 212 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 117 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,362 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் 46,495 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 80,672 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 65.55 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story