தமிழகத்தில் இன்று 5,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல் + "||" + Corona infection confirmed in 5,088 people in Tamil Nadu today - Health Department information
தமிழகத்தில் இன்று 5,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 5,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 5,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,40,943 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,052 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,78,108 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 5,718 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,86,454 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 44,437 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 87,341 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 80.44 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 500-ஐ கடந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 562 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மார்ச் 12-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மே 2-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழகத்தில் கொரோனா விதிமீறல் தொடர்பான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு முழுமையான விமான சேவைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.