போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 9 April 2022 5:01 PM GMT (Updated: 9 April 2022 5:01 PM GMT)

காரைகாலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சேதுமணி (வயது 24). இவர் காரைக்கால் நகர் பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கஞ்சா மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது அவர்  கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று அவர் குற்ற வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரை காரைக்கால் நகர போலீசார் வழக்கு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன சேதுமணி, காரைக்கால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வாயிலில், போலீசாரை கண்டித்து தனது உடலில் திடீரென மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். மேலும் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story