தமிழகத்தில் மேலும் 89- பேருக்கு கொரோனா


கோப்புப் படம் (பிடிஐ)
x
கோப்புப் படம் (பிடிஐ)
தினத்தந்தி 7 May 2022 2:47 PM GMT (Updated: 7 May 2022 2:47 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 89- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று பாதிப்பு நேற்றை விட சற்று உயர்ந்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 64 ஆக பதிவான நிலையில், இன்று பாதிப்பு சற்று உயர்ந்து 89- ஆக உள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் இன்று புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 306- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவில் இருந்து மேலும் 64 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை.  

தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 42- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 30- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 319- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 


Next Story